ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டபுரத்தில் மக்காச்சோள காட்டில் யானை தாக்கி பள்ளி மாணவர் சிபு மாதேஷ் படுகாயம் அடைந்தார். தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பள்ளி மாணவர், சகோதரர் இரவுநேர காவலுக்கு சென்றபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. யானை தாக்கி படுகாயமடைந்த பள்ளி மாணவர் சிபு மாதேஷ் தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.