திருத்துறைப்பூண்டி, ஏப். 29: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூண்றாண்டு கண்ட பள்ளியாகும். இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகபடுத்துவதற்காக ஆண்டுதோறும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 1 மணி வரை திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற குறைபாடுகள் இருந்தால் தக்க பரிசோதனை செய்யப்படுகிறது.