நீடாமங்கலம், ஏப். 29: நீடாமங்கலத்தில் குடிநீர் மேல்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார்,ஒன்றிய துணைத்தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சாந்தகுமார் கலந்து சிறப்புரை வழங்கினார்.ஒன்றிய துணை தலைவர் சரவணன், துணைச் செயலாளர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மூத்த உறுப்பினர் மகாலிங்கம் மற்றும் நாகராஜ்,காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் இவர்களின் பதவி பாதுகாப்பு நலன் கருதி அடையாள அட்டை மற்றும் ஊதிய நிலுவை பாக்கி கேட்டு பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மே 25ம் தேதி காலை 11 மணிக்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு நடத்துவது என நேற்று நடைப்பெற்ற நிர்வாகி கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்பட்டது.