சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்த இபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். மீனவர்களின் படகிற்கு நிவாரணமாக ரூ.50,000, கண்ணாடி இழை படகிற்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீன்பிடி வலைக்கு ரூ.25,000, கட்டுமரத்திற்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.