சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவியில் காலியாக உள்ள 1,230 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மே மாதம் 27ம் தேதி நடத்தப்பட்டது. எழுத்து தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் 23,578 பேரின் மதிப்பெண்கள் மற்றும் தர வரிசை பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.