Friday, May 10, 2024
Home » அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது!: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!!

அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது!: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை என ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அமலாக்கத்துறையினர் காவலுக்கு எடுக்க உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்தும் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏ.எஸ்.போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும்:

செந்தில் பாலாஜி கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பு வழங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை: கோர்ட்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல்:

செந்தில் பாலாஜிக்கு 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜி உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கப்படுகிறார்.

செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி:

கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கைது செய்த முதல் 15 நாட்களுக்குப் பின் போலீஸ் காவல் இல்லை என்ற அனுபம் குல்கர்னி தீர்ப்பை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

You may also like

Leave a Comment

10 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi