ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ரவிக்குமார், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதி சண்முகம், பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டு ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் குணசேகரன், முனுசாமி, அப்புன், வெங்கடேசன், வடிவேல், சிவசங்கரன், வேலு, விஜயபிரசாத், கோட்டி, ரோஸ், கணபதி, சபாபதி, அம்பேத்கர் நகர் ராஜேஷ், சிவா, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.