ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (73), அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவன காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக பட்டாபிராம் ரயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்த ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.