சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கர் நகர் 3வது தெருவைச் சேர்ந்த முருகன் (45) என்பவர் கடந்த 24ம் தேதி கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், 5வது தெருவில் உள்ள மின்கம்பத்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் பாய்ந்து பலியானவர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு
previous post