சென்னை: விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை. விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.