Thursday, May 16, 2024
Home » தேர்தல் பத்திர ஊழல், பி.எம்.கேர்ஸ் நிதி முறைகேடு எல்லா ரகசியங்களும் விரைவில் அம்பலப்படும்: சிதம்பரம் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தேர்தல் பத்திர ஊழல், பி.எம்.கேர்ஸ் நிதி முறைகேடு எல்லா ரகசியங்களும் விரைவில் அம்பலப்படும்: சிதம்பரம் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

by Ranjith

பத்தாண்டு ஆட்சியில், பா.ஜ.க. ஊழல்கள் ஒன்றா – இரண்டா. அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான், உலக நாடுகள் மத்தியில், இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல். தேர்தல் பத்திரம் போன்று மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார். அதுவும் ‘பி.எம். கேர்ஸ் பண்ட்’ என்று பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார். இப்படி எல்லா ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும்.

அதேபோன்று, ரபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சிதம்பரத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் வேட்பாளர் தொல்.திருமாவளவன், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை, பகையாளி இந்தியாவாக மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்குத் தேவையில்லை.

இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பா.ஜ.வுடன்தான் – பா.ம.க. கூட்டணி அமைத்திருக்கிறது. பா.ஜ. – பா.ம.க. கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. ஆனால், நாங்கள் உருவாக்கி இருக்கும், இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணி. தி.மு.க.வும் – திருமாவும் பேசும் சமூகநீதிக் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஜூன் 4 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா கூட்டணி ஆட்சியில் இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற இருக்கிறது. பா.ஜ. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. அரசியலமைப்புச் சட்டம் அடியோடு மாற்றப்படும். தேர்தல் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும். பத்தாண்டு ஆட்சியில், பா.ஜ.க. ஊழல்கள் ஒன்றா – இரண்டா. அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான்.

உலக நாடுகள் மத்தியில், இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல். தேர்தல் பத்திரம் போன்று மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார். அதுவும் ‘பி.எம். கேர்ஸ் பண்ட்’ என்று பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார். இப்படி எல்லா ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும். அதேபோன்று, ரபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும்.

மக்கள் விரோத பா.ஜ. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். தொழிலாளர் விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் – வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். மக்கள் எல்லாத்தையும் மறந்துவிட்டு இருப்பார்கள் என்ற நினைத்து வகைதொகை இல்லாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய் பேசுகிறார் பழனிசாமி. அ.தி.மு.க.வில் கடைசித் தொண்டன்கூட தலைவராக முடியும் என்று பழனிசாமி சொல்கிறார்.

உண்மை என்ன? அதிகமாகக் கப்பம் கட்ட கூடியவர்தான் தலைவராக முடியும் என்று கூவத்தூரில் ஏலம் எடுத்த பழனிசாமி மறக்கலாம் மக்கள் மறக்கவில்லை. தி.மு.க. ஆட்சி ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது என்று அடுத்த உருட்டு உருட்டியிருக்கார் பழனிசாமி. வரலாறு தெரியாத ஞானசூன்யங்களும், தற்குறிகளும்தான் இப்படி பேசுவார்கள். 1976ல் எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் போட்டதற்காகவும் – 1991ல் இலங்கைத் தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தது என்று சொல்லியும் தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார்கள்.

இந்த வரலாறு எல்லாம் தெரியாமல், எதையாவது உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. கொஞ்சம் நாவடக்கத்தோடு பேசுங்கள். மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிக் கொட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு விவசாயி என்று சொல்ல முடியுமா உங்களால். நீங்கள் விவசாயி இல்லை. விவசாயிகளை அழிக்க நினைத்த விஷவாயு.

சட்டமன்றத் தேர்தல் வரட்டும் அ.தி.மு.க.விடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே தி.மு.க. பறிக்கும். இது உறுதி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த செய்யப் போகும் நன்மைகள்மேல் நம்பிக்கை வைத்து சொல்கிறேன். ஏப்ரல் 19ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. அதற்குத் துணைபோகும் பா.ம.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய துரோகக் கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

You may also like

Leave a Comment

4 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi