திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 26ம் தேதி 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. இந்நிலையில் தேர்தல் முறைகேடுகளை கண்காணிப்பதற்காக மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் இதுவரை 2122 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் தொடர்பாக பொய் செய்திகள், வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்கள், டிவி, பத்திரிகைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் அதிகாரிகள் தவிர போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.