செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளாட்சி தேர்தல் தோல்வி பகையால் வெற்றி பெற்றவரின் மகனின் செல்போன் நம்பரை, பாலியல் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் எனக்குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது செய்யபடுள்ளார். கீழவலம் ஊராட்சி துணைத்தலைவருக்குப் போட்டியிட்ட கஜபதி தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து வென்றவரின் மகன் நித்யானந்தம் தனக்கு அடிக்கடி ஆபாசமாக பேசி அழைப்பு வருவதாக போலீசில் புகாரளிக்க கஜபதி செய்த செயல் அம்பலமாகியுள்ளது.