கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே நம்பியூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). கூலித்தொழிலாளி. இவர் ரங்கநாதபுரம் என்ற இடத்தில் உள்ள 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். கடந்த 23ம் தேதி முதல் நேற்று மதியம் வரை 3 நாட்களாக கிணற்றுக்குள்ளேயே கிடந்துள்ளார். நேற்று மதியம் அவ்வழியாக கால்நடைகளை மேய்த்தபடி சென்றவர்கள், கிணற்றில் பழனிச்சாமி கயிற்றை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடுவதை பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பழனிச்சாமி பத்திரமாக மீட்கப்பட்டார்.