நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தினமும் உயர்ந்து வருகிறது. நேற்று, மேலும் 5 காசுகளை என்இசிசி உயர்த்தி விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 510 காசில் இருந்து, 515 காசாக நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதற்கேற்ப நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. கடும் வெப்பம் காரணமாக, கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.