சென்னை: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேற்று தலைமை செயலகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின சான்றிதழை வழங்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து பெறுவதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை தொடங்கி வைத்தார்.
சிறுபான்மையின அந்தஸ்து கோரும் கல்வி நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிய முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், ஆணைய உறுப்பினர் செயலர் சம்பத், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், தாவூத் மியாகான் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.