சேலம்: அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்து சேலத்தில் முகாமிட்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். எந்த ஊருக்கு சென்றாலும் அவருடனேயே செல்வார்கள். சேலத்திற்கு வந்தால் மாநகர ஆயுதப்படையில் இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். எங்கு சென்றாலும் அவருடனே செல்வார்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி, சேலம் போலீஸ் பாதுகாப்பை நிறுத்திவிட்டு, மத்திய தொழில்பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான சிலுவம்பாளையம் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி எங்கு இருக்கிறார்? என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் கோவையில் இருப்பதாகவும், சிலர் கேரளாவில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். அவர் சென்னை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் எங்கு செல்கிறோம் என்ற தகவலை தெரிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு வீரர்களை அழைத்து செல்லாததால் பரபரப்பு
previous post