சென்னை: அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றத்தற்கு வாழ்த்துகளை தெரிவித்தவருக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: அதிமுக பொதுச்செயலாளராக என்னை, ஏகோபித்த ஆதரவோடு ஒருமனதாகத் தேர்ந்ெதடுத்துள்ள கழகத் தொண்டர்கள், கிளை கழகச் செயலாளர், நகர. பேரூராட்சி வார்டு கழக செயலாளர்கள், மாநகராட்சி வட்டக் கழக செயலாளர்கள் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.