சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடிக்கு எதிராக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தால் அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கே.சி.பழனிசாமி மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி பணம் வசூலிப்பதாக கே.சி.பழனிசாமி மீது எடப்பாடி புகார் கூறியிருந்தார். தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் கூறியுள்ளதாக கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.