லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிசாமாவ் சட்டமன்ற தொகுதியில் இருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்சமாஜ்வாடி எம்எல்ஏ இர்பான் சோலாங்கி. இவர் தற்போது மகாராஜ்கஞ்ச்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பணமோசடி வழக்கு தொடர்பாக இர்பான் சோலாங்கி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். கான்பூரில் உள்ள சோலாங்கிக்கு சொந்தமான 5 இடங்கள், மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்.
சமாஜ்வாடி எம்எல்ஏ வீட்டில் ஈடி சோதனை
previous post