கோலாலம்பூர், ஏப்.21: சிங்கப்பூரில் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்கள் ஆன நிலையில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தங்கராஜ் சுப்பையா(46) போதைப்பொருள் உட்கொண்டது மற்றும் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கடந்த 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அடுத்த வாரம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.