சென்னை: போதைப்பொருள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் எதிர்க்காலத்தை இழக்கின்றனர். போதைப்பொருள் பயன்பாடு தனி மனிதர் மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும். போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.