சேலம்: மருமகளிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக மேட்டூர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருமகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேட்டூர் எம்.எல்.ஏ.சதாசிவம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 2019இல் திருமணமான நிலையில் கணவன், மாமனார், மாமியார் நாத்தனார் சேர்ந்து வரதட்சணை கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.