கன்னியாகுமரி : மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கன்னியாகுமரியில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், குமரியில் மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் பரிந்துரைகளை பெறுகின்றனர். நாகர்கோவில் தேரேகால் புதூரில் வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்பு நடைபெறுகிறது.