Monday, May 27, 2024
Home » திண்டிவனம் நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை சுடுகாட்டில் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு-நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

திண்டிவனம் நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை சுடுகாட்டில் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு-நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

by Lakshmipathi

திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள ரோசணை சுடுகாட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் சாலை ஓரம் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சி முழுவதும் சீர்கேடு ஏற்படுவதுடன், ஆங்காங்கே துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இதேபோல் திண்டிவனம் மாரிசெட்டிகுளம் அருகே உள்ள ரோசணை சுடுகாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி, குப்பைக்கு தீ வைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோல் நேற்று நகராட்சி வாகனத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ரோசணை சுடுகாட்டில் கொட்டும்போது, அங்கு வந்த பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள் சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றி, இடத்தை சுத்தம் செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

19 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi