Thursday, May 16, 2024
Home » தினகரன் நாளிதழ்- விஐடி பல்கலைக்கழகம் இணைந்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வெற்றி நமதே நிகழ்ச்சி தொடங்கியது!!

தினகரன் நாளிதழ்- விஐடி பல்கலைக்கழகம் இணைந்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வெற்றி நமதே நிகழ்ச்சி தொடங்கியது!!

by Porselvi
Published: Last Updated on

வேலூர்: தினகரன் நாளிதழ் – விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், மாணவர்களுக்கான வெற்றி நமதே நிகழ்ச்சி விஐடியில் தொடங்கியதில். இதில் கருத்தாளர்கள் பங்கேற்று உயர்கல்வி தேர்வு செய்வது எப்படி என்ற பல பயனுள்ள தகவல்களை வழங்க உள்ளனர்.தினகரன் நாளிதழும், வேலூர் விஐடியும் இணைந்து, பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் அடுத்தது என்ன படிக்கலாம் என்ற கல்வி நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் ‘வெற்றி நமதே’ நடத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த கல்வி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்து வருகின்றனர்.

தற்போது பிளஸ்2 பொதுத்தேர்வினை முடித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற லட்சியமும், கனவுகளோடும், தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, மேல்நிலை கல்வி செல்ல விரும்பும் மாணவர்கள், பிளஸ் 1ல் இருந்து பிளஸ் 2 செல்லும் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை எவ்வாறு அமைத்து கொள்வது? அதற்காக எத்தகைய உயர்கல்வியை தேர்வு செய்து படிப்பது? என்பதை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் வேலூர் தினகரன் நாளிதழும், வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து நடந்தும் `வெற்றி நமதே’ நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று காலை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பிளஸ் 1 முடித்துள்ள மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் தங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்தில் முக்கிய பங்கெடுக்கும் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் இலவசமாக பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஜூபிடர் எஜூகேஷன் அகாடமி இணை நிறுவனர் நாகதாதா, எஸ்ஐசிஏஎஸ்ஏ தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஏ.ரமேஷ் ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டு பிளஸ்2 முடித்த மாணவர்கள் எந்த துறையில் உயர்கல்வி படித்தால் என்ன வேலைவாய்ப்பு கிடைக்கும், எதிர்காலத்தில் அதிக சம்பளமும் கிடைக்கும் என்ற பயனுள்ள தகவல்களை வழங்குகின்றனர். மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க உள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம் என்று தெளிவான முடிவுகள் எடுக்க தினகரன், விஐடியின் வெற்றி நமதே நிகழ்ச்சி மிகவும் உறுதுணையாக இருக்கும்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் படிக்கற்களாய் வெற்றி நமதே நிகழ்ச்சி நிச்சயம் அமையும். எனவே தங்களது உயர்கல்வி கனவை, நனவாக்கி சிறந்த எதிர்காலத்திற்கு துணை நிற்கும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை மாணவர்கள் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்கால வெற்றிக்கு இந்த வாய்ப்பினை மாணவர்களும், பிள்ளைகளின் கனவுகளையும் சேர்த்து சுமக்கும் பெற்றோர்களும் தவறாமல் பயன்படுத்தி, பயனடைய வேண்டும்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi