தருமபுரி: இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட டொக்கம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டை அதிமுக நிர்வாகி அபகரித்துக்கொண்டதாக ஊர் மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாடையுடன் வந்து புகார் தெரிவித்தனர். இறந்தவர்களின் சடலத்தை அவர்களின் வீட்டிலேயே புதைக்கச் சொல்லி அந்நபர் மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.