அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கடந்த மாதம் 22ம் தேதி திறக்கப்பட்டது. 23ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளை பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது, “ராமர் கோயிலில் கடந்த 11 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கை ரூ.8 கோடி, காசோலை மற்றும் ஆன்லைன் காணிக்கை ரூ.3.50 கோடி என மொத்தம் ரூ.11 கோடிக்கு மேல் காணிக்கை வசூலாகி உள்ளது.