சென்னை: தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 700 மெகாவாட் அளவிற்கு விவசாய பயன்பாட்டிற்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் புதிதாக விவசாய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.