சென்னை: சென்னை தேமுதிக அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்வதற்கான பணி தொடங்கியுள்ளது. தேமுதிக தலைமையக வளாகத்தில் நல்லடக்கம் செய்ய ஏதுவாக தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல், ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக கோயம்பேடுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.