டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு வாரண்ட்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்றுள்ளதால் பரபரப்பு நிலவியது. அமலாக்கத்துறை சம்மனுக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதிக்க மறுத்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்தார்.