டெல்லி : டெல்லி மதுபான கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தொடர்ந்து சிறையில் இருப்பது குறித்து ED-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “உண்மை என்னவென்றால், இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்-ஐ 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.