டெல்லி : டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்ட செய்திகளை சேகரிக்க சென்ற பஞ்சாப் மூத்த பத்திரிகையாளர் நீல் பிலிந்தர் சிங், ஷம்பு எல்லைப்பகுதியில் பணி செய்துகொண்டிருந்தபோது காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவருக்கு, அங்கிருந்தவர்கள் முதலுதவி அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.