டெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி நிர்வாகிகள் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.