சென்னை: அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். அப்போது, சினிமா பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். போத்ரா இறந்த பின்னர் இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு 15வது பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீலும் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஆர்.ேக.செல்வமணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.