செங்கல்பட்டு: மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு இவர் தனது 15 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை அழுதவாறு தனது தாயாரிடம் கூறி உள்ளார்.
இதையடுத்து, அச்சிறுமியின் தாயார் இதுபற்றி பள்ளிக்கரணை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, மன உளைச்சல் அடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி, சுரேசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.