மொரேனா: மத்தியபிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் ரத்தன்பசாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் தோமர் (55). இவரது மகள் சிவானி (19), பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராதேஷியாம் தோமர் (21) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 3ம் தேதி சிவானியும், ராதேஷியாமும் மாயமாகினர். போலீசார் விசாரித்ததில், ராஜ்பால் சிங் தனது மகளையும், காதலன் ராதேஷியாமையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சம்பல் ஆற்றில் சடலங்களை வீசியது தெரியவந்தது. ஆற்றில் 2 நாட்களாக போராடியும் சடலங்களை மீட்க முடியவில்லை. ஆற்றில் முதலைகள் இருப்பதால் சடலங்கள் கிடைப்பது சிரமம் என கிராமமக்கள் கூறுகின்றனர். சடலங்கள் மீட்கப்பட்ட பின்னரே கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.