மும்பை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் கேட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுர ஆதீன வீடியோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தனிப்படையால் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.