மிர்பூர்: வங்கதேச மகளிர் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 108 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்தது. மந்தனா 36, கேப்டன் ஹர்மன்பிரீத் 52, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 86, ஹர்லீன் 25 ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் சுல்தானா, நகிதா தலா 2, மருபா, ரபியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 35.1 ஓவரில் 120 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பர்கானா 47, ரித்து மோனி 27, முர்ஷிதா 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஜெமிமா 3.1 ஓவரில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். தேவிகா 3, ஸ்நேஹ், மேக்னா, தீப்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 108 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ஆல் ரவுண்டராக அசத்திய ஜெமிமா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி மிர்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது.