Wednesday, May 1, 2024
Home » சுங்கச்சாவடிகளை அகற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வலியுறுத்த வேண்டும்: இறுதிகட்ட பிரச்சாரத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் வேண்டுகோள்

சுங்கச்சாவடிகளை அகற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வலியுறுத்த வேண்டும்: இறுதிகட்ட பிரச்சாரத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் வேண்டுகோள்

by Mahaprabhu

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் மின்னல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எந்தெந்த பகுதிகளில் எந்நெந்த தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு நேரில் செல்லும் தமிழச்சி தங்கப்பாண்டியன், அங்குள்ள மக்களிடம் வாக்குறுதிகள் அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருவது நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. அதேபோன்று வீடு, வீடாக சென்று மக்களுடன் உறவினர்களை போல பேசிபழகி வாக்கு சேகரிப்பது பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது.

இதனால் தொகுதி முழுவதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் மாலைகளை அணிவித்தும் தங்கள் வீட்டு உணவை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் தென்சென்னை தொகுதியில் விடுப்பட்ட பகுதிகளில் ஆட்டோவில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஈடுபட்டார். அதன்படி தென்சென்னைக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலைகளான பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தென்சென்னை நாடாளுமன்றத்தின் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இறுதிகட்ட சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

பிரச்சாரத்தின் போது தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது : பத்து வருடங்களுக்கு மேலாக இயங்கக்கூடிய சுங்கச் சாவடிகளை அகற்றுங்கள், கட்டணங்களை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ஆனால் இன்னும் அகற்றப்படவில்லை நிறைவேற்றப்படவும் இல்லை. இப்படி எதற்கும் ஒன்றிய அரசு செவிசாக்கவில்லை. இங்குள்ள எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை தருவதை விட, ஒன்றிய அரசு தாமதம் படுத்திக்கொண்டுள்ள மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதியை ஒதுக்கச்செய்யுங்கள். தென்சென்னை தொகுதி என 500 மீட்டர் மட்டும் கட்டப்படாமல் உள்ள வேளச்சேரி – புனித தோமையார் மலை இடையேயான ரயில் பாதையை அமைக்க வலியுறுத்துங்கள். அதை விட்டுவிட்டு வெற்று வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

five + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi