டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு ஏப்.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.