கடலூர்: கடலூர் மீனவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சோனாங்குப்பம் மீனவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018ல் ஏற்பட்ட மோதலில் பஞ்சநாதன் என்ற மீனவர் கொல்லப்பட்டார்.
கடலூர் மீனவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை; உறவினர்கள் தர்ணா போராட்டம்..!!
previous post