சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்.4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஐகோர்ட்டில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.