மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை நேரில் வரவழைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. பணியார்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறையில்தான் அதிகப்படியான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.