Sunday, May 12, 2024
Home » இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல, பரம்பரை நோய், தீய பழக்கங்களே காரணம் : ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தகவல்

இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல, பரம்பரை நோய், தீய பழக்கங்களே காரணம் : ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தகவல்

by Porselvi

டெல்லி : கொரோனா தடுப்பூசி இந்தியாவின் இளைஞர்கள் இடையே திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆரோக்கியமான இளைஞர்கள் இடையே திடீர் மரணங்கள் ஏற்படும் விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என நாடு முழுவதும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, ஆரோக்கியமான இளைஞர்கள் இடையே விவரிக்கப்படாத மரணங்களுக்கு பங்களிக்கும் காரணிகளை ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்தது. அக் 1. 2021 மற்றும் மார்ச் 31 2023க்கு இடையில் விவரிக்கப்படாத காரணங்களால் திடீரென இறந்த 18 முதல் 45 வயதுடைய 729 ஆரோக்கியமான நபர்களின் அடிப்படை உடல்நலப் பிரச்சனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வின் இறுதியில் கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் இடையே திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை என்றும் உண்மையில் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தை தடுப்பூசி குறைத்துள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இளம் வயதினர் இடையே ஏற்பட்ட திடீர் இறப்புகள், பரம்பரை நோய் வரலாறு, வாழ்க்கை முறை மாற்றம் , மது உள்ளிட்ட தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஆகியவை காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

twenty + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi