சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் விசிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.