புதுடெல்லி: மக்களவைக்கு 7 கட்டங்களாக வாக்கு பதிவு நடக்கிறது. வரும் 19ம் தேதி முதல் கட்ட வாக்குபதிவு நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ நாடு முழுவதும் 266 தொகுதிகளில் குறைந்த வாக்கு பதிவு சதவீதம் குறைந்த தொகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன.
அதில் 215 தொகுதிகள் கிராமப்புற தொகுதிகள்,51 தொகுதிகள் நகர்ப்புற பகுதிகளாகும். பீகார், உபி, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட்,தெலங்கானா,குஜராத் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த தொகுதிகள் வருகின்றன. இங்கு வாக்கு பதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.