டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க பாஜக-ஆர்எஸ்எஸ் நினைக்கின்றன. சமூக நீதிக்காக போராடும் மாவீரர்களின் கனவுகளை கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை ஒழிக்கவும் முயற்சி. இதுதான் அடையாள அரசியலுக்கும் உண்மையான நீதிக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறியுள்ளார்.