சென்னை: மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம் என்று சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள அலுவலகத்தில் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழக தொழிலார்களின் ஸ்டிரைக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.