பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொப்பள் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருக்கும் கரடி சங்கண்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து பாஜவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்த அவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்தார். அதன்படி நேற்று பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகக்தில் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநில தலைவரும் துணைமுதல்வருமான டி.கே.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி
previous post